சிவகாசி, பிப். 12: சிவகாசியில் ஆமை வேகத்தில் நகரும், நகர் காவல்நிலைய கட்டிட பணியை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசியில் உள்ள நகர் காவல்நிலைய சரக பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இக்காவல் நிலைய கட்டிடம் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் கட்டியதாக கூறப்படுகிறது. இங்கு போதிய இடவசதி இல்லாததால், போலீஸ்காரர்கள், தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்தினர். விபத்து மற்றும் வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் காவல்நிலையம் முன்பு நிறுத்தப்படுகின்றன. புகார் மனு கொடுக்க